பாகிஸ்தான் பிரதமரை பதவி விலகக் கோரி கராச்சியில் பேரணி

பாகிஸ்தானில் ஆயிரக்கணக்கான எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் கராச்சி நகரில் நேற்று பேரணியில் ஈடுபட்டனர். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் பேரணியில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.

9 முக்கிய எதிர்க்கட்சிகள் இணைந்து பாகிஸ்தான் டெமாக்ரடிக் மூவ்மென்ட் (PDM) எனும் தளத்தை கடந்த மாதம் உருவாக்கி, நாடு முழுவதும் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களைத் தூண்டின.

பேரணியில் கூடியவர்களிடையே உரையாடிய மரியம் நவாஸ், மக்களின் வேலைகளும் உணவும் பறிக்கப்பட்டு விட்டதாகக் குற்றம் சாட்டினார்.

கொவிட்-19 சூழலுக்கு முன்னதாகவே நாட்டின் பொருளியல் சரிவை நோக்கியிருந்த நிலையில், தற்போது பண வீக்கம் இரட்டை இலக்கத்தில் இருப்பதற்கு அரசாங்கத்தை எதிர்க்கட்சிகள் காரணம் காட்டி வருகின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை கிழக்கு குஜ்ரன்வாலா நகரில் மாபெரும் போராட்டமும் நடத்தப்பட்டது. திரு இம்ரான் கான் பதவியேற்ற ஈராண்டுகளில் நிகழ்ந்த ஆகப் பெரிய போராட்டம் அது என்று கூறப்படுகிறது. அடுத்த தேர்தல் 2023ஆம் ஆண்டு நடைபெறும் என்று கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!