தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நிலவுக்கு சீனாவின் ஆளில்லா விண்கலம்

1 mins read
020d77c1-3a91-4645-b17c-454501664e19
படம்: ஏஎஃப்பி -

சீனா, அடுத்த சில நாட்­களில் ஆளில்லா விண்­க­லத்தை நில­வுக்கு அனுப்­ப­வி­ருக்­கிறது.

'சாங்-5' என்று பெய­ரி­டப்­பட்­டுள்ள அந்த விண்­க­லம் நில­வில் இறங்கி கற்­களை சேக­ரித்து பின்­னர் பூமிக்­குத் திரும்­பும் என்று சீனா­வின் அறி­வி­யல் அறி­ஞர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

இந்த முயற்­சி­யில் வெற்றி பெற்­றால் நில­வில் கற்­களை சேக­ரித்து பூமிக்­குத் திரும்­பிய 3வது நாடாக சீனா இருக்கும்.

இதற்கு முன் அமெ­ரிக்­கா­வும் ரஷ்­யா­வும் விண்­க­லத்தை அனுப்பி நில­வி­லி­ருந்து கற்­களை சேக­ரித்­துள்­ளன. நிலவு உருவானது பற்றி அங்­கி­ருந்து கொண்டு வரப்­படும் கற்­கள் மூலம் ஆரா­யப்­படும் என்று ஆய்­வா­ளர்­கள் தெரிவித்தனர். சீனா­வின் நில­வுப் பய­ணம் அதற்கே சோத­னை­யாக அமை­யும் என்­றும் கூறப்­ப­டு­கிறது.

கடந்த 1959ல் ரஷ்­யா­வின் விண்­க­லம் முதல் முறை­யாக நில­வில் தரை­யி­றங்­கி­யது.

அதன் பிறகு ஜப்­பான், இந்­தியா உள்­ளிட்ட நாடு­களும் நில­வில் விண்­க­லத்தை இறக்­கி­யுள்­ளன.

அமெ­ரிக்கா தனது அப்­போலோ திட்­டத்­தின் மூலம் நில­வில் மனி­தர்­க­ளை­யும் இறக்கி மனி­த­கு­லத்­தின் கால­டியை பதிக்­கச் செய்­தது. 1969 முதல் 1972 வரை­யில் அமெ­ரிக்கா மொத்­தம் 12 விண்­வெளி வீரர்­களை நில­வில் இறக்கி 382 கிலோ எடை­யுள்ள பாறை­ களை­யும் மண்­ணை­யும் பூமிக்­குக் கொண்டு வந்­துள்­ளது.

குறிப்புச் சொற்கள்