ஆஸ்திரேலியாவுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் சமூக ஊடங்களில் போலி படத்தை வெளியிட்டதற்காக சீன அரசாங்கம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் வலியுறுத்தியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் குழந்தையின் கழுத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் கத்தி வைத்திருப்பது போன்ற படத்தை டுவிட்டரில் பெய்ஜிங் உலவ விட்டதாக ஆஸ்திரேலியா குற்றம் சாட்டியுள்ளது.
“ஆஸ்திரேலியாவை பழிவாங்கும் நோக்கத்தோடு சீன வெளியுறவு அைமச்சின் பேச்சாளர் ஷோவி லிஜியான் அந்தப் படத்தை வெளியிட்டுள்ளார். அதனை உடனடியாக பெய்ஜிங் அகற்ற வேண்டும். போலியாக உருவாக்கப்பட்ட படத்தை டுவிட்டரும் அகற்ற வேண்டும்,” என்று அவர் கூறினார்.
“சீனாவின் இத்தகைய செயலை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது. சீன அரசாங்கம் இதற்காக அவமானப்பட வேண்டும். ஆஸ்திரேலியாவுடனான பதற்றமான உறவை சீனா எப்படி கையாள்கிறது என்பதை உலக நாடுகள் கவனித்துக்கொண்டிருக்கின்றன. இருதரப்பு உறவுக்கு இது நல்லதல்ல,” என்று டுவிட்டர் பதிவில் பிரதமர் மோரிசன் குறிப்பிட்டார்.
ஆப்கானிஸ்தானில் கடந்த வாரம் நடந்ததாக நம்பப்படும் சம்பவம் தொடர்பில் 13 வீரர்கள் மீது ஆஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. வீரர்கள் மீது போர்க் குற்றங்கள் சுமத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சீன அரசாங்கத்தின் பேச்சாளர் தமது டுவிட்டர் பதிவில் ஆப்கானிஸ் தானில் பொதுமக்களும் சிறைக் கைதிகளும் ஆஸ்திரேலிய வீரர் களால் கொல்லப்படுவது அதிர்ச்சி யளிக்கிறது என்று தெரிவித் திருந்தார். கிருமித்தொற்றின் மூலத்தைக் கண்டறிய தனிப்பட்ட விசாரணை யாளர்களை வூஹான் நகருக்குள் அனுமதிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா கூறியதால் சீனா ஆத்திரமடைந்துள்ளது. அதன் பிறகு இரு தரப்பு உறவு நாளுக்கு நாள் மோசமடைந்துவருகிறது.
இதற்கிடையே நீண்டநாட் களுக்குப் பிறகு வெளிநாட்டவர்கள் நுழைய ஆஸ்திரேலிய எல்லைகள் திறக்கப்பட்டுள்ளன.