சவூதி அரேபிய துறைமுகமான ஜெட்டாவில் நேற்று நடந்த வெடிப்புச் சம்பவம் ஒன்றில், குறைந்தது ஒரு கப்பல் சேதமடைந்ததாக வெவ்வேறு செய்தி அறிக்கைகள் கூறுகின்றன.
வெடிபொருள்கள் ஏற்றிய படகு ஒன்று அந்தக் கப்பல் மீது மோதியதாக சவூதி அரேபியாவின் ஆற்றல் துறை அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டார்.
தாக்குதல்களுக்கு யார் காரணம் என்பது பற்றியோ அல்லது வெடிபொருள் நிரம்பிய அந்தக் கப்பல் பற்றியோ தகவல்கள் ஏதுமில்லை.
எண்ணெய்-பொருள் கப்பலான ‘பிடபள்யு ரைண்’, ஞாயிற்றுக்கிழமை பின்னிரவு 12.40 மணியளவில் எண்ணெய் வெளியேற்றப் பணியில் இருந்தபோது தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
உடனே சிங்கப்பூரால் அங்கீகரிக்கப்பட்ட அந்த கலன், தன் எண்ணெய் வெளியேற்ற வேலையை நிறுத்திக்கொண்டது.
யாருக்கும் காயம் ஏற்படாத வண்ணம் நெருப்பும் அணைக்கப்பட்டது.
இதே போல் சுமார் மூன்று வாரங்களுக்கு முன், சவூதியின் ஷுகேக் முனையத்தில் எண்ணெய்க் கப்பல் ஒன்று தாக்கப்பட்டு சேதமடைந்தது.