ஜகார்த்தா தடுப்புக்காவல் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பயங்கரவாத சந்தேக நபர்கள்

ஜகார்த்தா தடுப்புக்காவல் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பயங்கரவாத சந்தேக நபர்கள்

1 mins read
1a4e5370-dcfd-4b66-9883-fdfcf16d689d
சுமத்ராவில் சிக்கிய ஜெமா இஸ்லாமியா கட்டமைப்பின் மூத்த தலைவர் ஸுல்கர்நயேன் நேற்று ஜகார்த்தா கொண்டு செல்லப்பட்டார். 2002ஆம் ஆண்டு பாலி தீவில் 202 உயிர்களைப் பறித்த வெடி குண்டு தாக்குதலின் மூளையாகச் செயல்பட்டவர் இவர் என சந்தேகிக்கப்படுகிறது. படம்: ஏஎஃப்பி -

இந்­தோ­னீ­சி­யா­வில் அண்­மைய வாரங்­க­ளாக நடத்­தப்­பட்ட வேட்­டை­யில் பிடி­பட்ட 23 பயங்­க­ர­வாத சந்­தேக நபர்­கள் நேற்று தலை­ந­கர் ஜகார்த்­தா­வுக்­குக் கொண்டு செல்­லப்­பட்­ட­னர்.

தலை­ந­கர் அருகே உள்ள தடுப்­புக்­கா­வல் மையத்­தில் இவர்­கள் அனை­வ­ரும் அடைக்­கப்­ப­டு­வர். அல்-காய்தா கட்­ட­மைப்­பு­டன் தொடர்­ ­புடைய இவர்­க­ளி­டம் அடுத்­த­கட்ட விசா­ரணை நடத்­தப்­படும். இவர்­களில் ஜெமா இஸ்­லா­மியா அமைப்பின் மூத்த தலை­வர் ஸுல்­கர்­ந­யேன், 57, என்­ப­வ­ரும் ஒரு­வர்.

2002ஆம் ஆண்டு பாலி தீவில் நடத்­தப்­பட்ட வெடி­குண்டு தாக்­கு­த­லில் தொடர்­பு­டை­ய­வர் என சந்­தே­கிக்­கப்­படும் இவர், இந்­தோ­னீ­சி­யா­வுக்­குள் 18 ஆண்­டு­க­ளாக தலை­ம­றை­வாக இருந்த நிலை­யில் கடந்த வாரம் சுமத்ராவில் பயங்­க­ர­வாத முறி­ய­டிப்­புப் பிரி­வி­ன­ரி­டம் பிடி­பட்­டார். இந்த தாக்­கு­த­லில் 202 பேர் உயி­ரி­ழந்­த­னர்.

அவர்­களில் பெரும்­பா­லா­னோர் வெளி­நாட்டு சுற்­றுப்­ப­ய­ணி­கள்.

தாக்­கு­த­லுக்­குப் பயன்­ப­டுத்­து­வ­தற்­கான வெடி­குண்­டு­க­ளைத் தயா­ரிக்க ஏரிஸ் சுமர்­சோனோ என்­றும் அழைக்­கப்­படும் ஸுல்­கர்­ந­யேன் உத­வி­ய­தாக இந்­தோ­னீ­சிய தேசிய போலிஸ் பேச்­சா­ளர் அக­மது ரம­தான் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­னார். ஆஃப்கா­னிஸ்­தா­னில் உள்ள ராணு­வப் பயிற்­சிக்­க­ழ­கத்­தில் ஏழாண்டு காலம் பயிற்­று­விப்­பா­ள­ராக ஸுல்­கர்­ந­யேன் வேலை செய்­த­தா­க­வும் அவர் கூறி­னார்.

குறிப்புச் சொற்கள்