கிறிஸ்துமஸ் விழாக்காலத்தையும் மக்களுக்கு யானைகள் மீதுள்ள ஆர்வத்தையும் இணைத்து கொரோனா கிருமிப் பரவல் தடுப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடம், குறிப்பாக சிறார்களிடம் ஏற்படுத்தும் முயற்சியில் தாய்லாந்து இறங்கியுள்ளது.
தலைநகர் பேங்காக்கில் சான்டா கிளோஸ் போல் வேடமணிந்த நான்கு யானைகள் நேற்று பள்ளி ஒன்றுக்குச் சென்று மாணவர்களுக்கு முகக்கவசங்களை அளித்தன.
யானைகளின் வருகையும் அன்பளிப்பும் பிள்ளைகளுக்கு புதிய உற்சாகத்தைக் கொடுத்ததுடன் கிருமி குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது.
தாய்லாந்தின் பல்வேறு மாநிலங்களிலும் நேற்று 46 புதிய தொற்று சம்பவங்கள் பதிவாகியதாக தாய்லாந்து சுகாதார அமைச்சு கூறியது.
புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து அந்நாடு ஆலோசித்து வருகிறது.