சிங்கப்பூரில் மேலும் 13 பேருக்கு கிருமித் தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களுடன் சேர்த்து கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 60,221க்கு அதிகரித்துள்ளது.
புதிதாக பாதிக்கப்பட்ட 13 பேரும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். சிங்கப்பூருக்கு வந்ததும் அவர்கள் அனைவரும் வீட்டில் தங்க உத்தரவிடப்பட்டது என்று சுகாதார அைமச்சு தெரிவித்தது. சமூக அளவில் யாருக்கும் தொற்று ஏற்படவில்லை. வெளிநாட்டு ஊழியர்கள் தங்குவிடுதிகளிலும் எவரும் பாதிக்கப்படவில்லை.

