மயாமி: தென் அமெரிக்க மாநிலமான லூவிசியானாவில் சுழல் காற்று காரணமாக இருவர் உயிரிழந்தனர்.
ஏழு பேர் காயமுற்றனர். காயமடைந்தோரின் நிலை குறித்து தகவல் வெளியிடப்படவில்லை.
கடந்த வெள்ளிக்கிழமையன்று பலத்த காற்று காரணமாக மரம் வேரோடு சாய்ந்து ஒரு வீட்டின் மீது விழுந்தது.
இதில் வீட்டில் இருந்த 48 வயது ஆடவர் மாண்டார். அதே வீட்டில் இருந்த பெண் காயமடைந்தார்.
இதற்கிடையே, லூவிசியானா மாநிலம் மேலும் பல சுழல் காற்றுகளாலும் ஆலங்கட்டி மழையாலும் பாதிக்கப்படக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஃபுளோரிடா மாநிலத்தில் வடமேற்குப் பகுதியில் புயல் காரணமாக மின்தடை ஏற்பட்டது.
இதன் காரணமாக ஏறத்தாழ 30,000 பேர் மின்சாரம் இன்றி தவித்ததாக தெரிவிக்கப்பட்டது.