வாஷிங்டன்: கொவிட்-19 பாதிப்புகளில் இருந்து உலகம் மீண்டுவிட்டாலும் நெடுங்காலத்துக்கு அதன் விளைவுகள் உலகப் பொருளியலில் ஆழமான வடுக்களாக இருந்துவரு மென வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
கொவிட்-19 தொற்றைச் சமாளித்து மீண்டு வர US$26 டிரிலியன் (S$34 டிரிலியன்) ஆதரவுத் திட்டங்கள், தடுப்பூசி இயக்கம் ஆகியவை காரணமாக பலரும் எதிர்பார்த்ததைவிட வேகமாக உலகப் பொருளியில் மீட்சி சாதிக்கப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
ஆனாலும்கூட கொரோனா காரணமாக பல நாடுகளிலும் ஏற்பட்டுள்ள கல்வி பாதிப்பு, வேலை இழப்புகள், போர்க்கால அளவுக்கு ஏற்பட்டுவிட்ட கடன்கள், இனங்கள், ஆண்-பெண் பாலினம், தலைமுறை, மக்கள்தொகை ஆகியவற்றில் அதிகமாகும் ஏற்றத்தாழ்வுகள் ஆகியவை வடுக்களாக நெடுங்காலத்துக்குத் தொடரும்.
குறிப்பாக ஏழை நாடுகளிலேயே பாதிப்புகள் அதிகமாக இருக்கும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
கொரோனா காரணமாக சென்ற ஆண்டில் உலகில் ஏற்பட்ட பாதிப்பு, 1930களில் ஏற்பட்ட உலக மகா பொருளியல் பாதிப்புக்குப் பிறகு இதுவரை உலகம் காணாதது என்று கூறப்படுகிறது.
உலக அளவில் 255 மில்லியன் மக்கள் முழு நேர வேலையை இழந்துவிட்டதாக அனைத்துலக தொழிலாளர் நிறுவனம் மதிப்பிடுகிறது. கடந்த 1990களுக்குப் பிறகு முதல்முறையாக உலக அளவில் நடுத்தர வர்க்கத்தினர் நிலை இறங்கிவிட்டதாக 'பியூ' ஆய்வு மையம் என்ற அமைப்பைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
எல்லா நாடுகளிலும் பாதிப்பு ஒரே மாதிரியாக இருக்காது என்று வல்லுநர்கள் கணிக்கிறார்கள்.
கொவிட்-19க்கு முந்தைய நிலைக்குத் திரும்ப காலம் பிடிக்கும் என்று உலக வங்கி தலைமை பொருளியல் வல்லுநர் கார்மென் ரெயின்ஹார்ட் கூறினார்.
குறிப்பாக ஊழியர்களுக்கு மறு தேர்ச்சிகள், படுமோசமாக பாதிக்கப் பட்ட நாடுகளுக்கு உதவிகள் போன்ற துறைகளில் சரியான கொள்கைகள் இடம்பெறும் பட்சத்தில், இந்தப் பத்து ஆண்டு களுக்குள் நன்கு மீண்டுவிட முடியும் என்று வல்லுநர்கள் கூறு கிறார்கள்.

