கட்டுமானத் துறைக்கு கூடுதல் ஆதரவு

கட்டுமானத் துறைக்கு கூடுதல் ஆதரவு

2 mins read
df1450b6-a7fb-4b91-a0fe-263c537e2ec8
இந்­தி­யா­வு­ட­னான எல்­லைக் கட்­டுப்­பா­டு­க­ளின் கார­ண­மாக கட்டு­மா­னத்­ து­றை­யில் மனி­த­வள தட்­டுப்­பாடு ஏற்­பட்­டுள்­ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ரின் கட்­டு­மா­னத்­ து­றைக்­குக் கூடு­தல் ஆத­ரவு வழங்க புதி­தாக மூன்று நட­வ­டிக்­கை­கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட உள்­ளன.

சீனா­வி­லி­ருந்து வரும் ஊழி­யர்­களை வேலை­யில் அமர்த்த நடப்­பில் உள்ள விதி­மு­றை­க­ளைத் தளர்த்துவது அவற்­றில் அடங்­கும்.

இந்­தி­யா­வு­ட­னான எல்­லைக் கட்­டுப்­பா­டு­க­ளின் கார­ண­மாக கட்டு­மா­னத்­ து­றை­யில் மனி­த­வள தட்­டுப்­பாடு ஏற்­பட்­டுள்­ளது.

அடுத்த மாதம் 7ஆம் தேதி­யி­லி­ருந்து அடுத்த ஆறு மாதங்­க­ளுக்கு சீனா­வைச் சேர்ந்த வேலை அனு­மதி அட்டை ஊழி­யர்­கள் சிங்­கப்­பூ­ருக்கு வரு­வ­தற்கு முன்பு தங்­கள் திறன் சான்­றி­தழை சீனா­வில் நிறைவு செய்­யத் தேவை­யில்லை.

சிங்­கப்­பூ­ருக்கு வரு­வ­தற்­குத் தகுதி, வேலை அனு­மதி அட்டை பெறும் தகுதி ஆகி­யவை இருந்­தால் போதும் என்று கட்­டட, கட்டு­ மான ஆணை­யம் நேற்று தெரி­வித்­தது. தங்­க­ளுக்­குத் தேவை­யான திறன் சான்­றி­தழை அவர்­கள் சிங்­கப்­பூ­ரில் பெற்­றுக்­கொள்­ள­லாம்.

கொவிட்-19 நெருக்­க­டி­நி­லை­யால் கட்­டு­மா­னப் பணி­கள் தாம­தம் அடைந்­துள்­ளன.

புதிய திட்­டத்­தின்­படி கட்­டு­மான ஒப்­பந்­தங்­க­ளுக்கு 49 நாள் நீட்­டிப்பு வழங்­கப்­படும் என்று அறி­விக்­கப்­படும்.

இது கடந்த ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி­யி­லி­ருந்து டிசம்­பர் 31ஆம் தேதி­ வரை உற்­பத்­தித்­தி­ற­னில் ஏற்­பட்ட இழப்பு கார­ண­மாக தாம­த­ம­டைந்த அர­சாங்­கத்­துறை கட்­டு­மான ஒப்­பந்­தங்­க­ளுக்­கும் பொருந்­தும்.

49 நாள் நீட்­டிப்­பைப் பெற ஒப்­பந்­த­தா­ரர்­கள் விண்­ணப்­பம் செய்­யத் தேவை­யில்லை.

அது­மட்­டு­மல்ல, அர­சாங்­கம் ஏற்­கும் தொகை தொடர்­பான தகு­திச் செல­வு­க­ளுக்­கான விரி­வான ஆதா­ரத்தை குத்­த­கை­தா­ரர்­கள் சமர்ப்­பிக்கத் தேவை­யில்லை.

இருப்­பி­னும், அர­சாங்­கம் ஏற்­கும் தொகைக்கு மேலான தகு­திச்செல­வு­க­ளைக் கோர விரும்­பு­ப­வர்­கள் தொடர்ந்து அதற்­கான ஆதா­ரத்­து­டன் விண்­ணப்­பம் செய்­ய­லாம்.

புதி­தாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் மூன்று புதிய திட்­டங்­கள் பற்­றிய விவ­ரங்­கள் தயா­ரா­ன­தும் கட்­டு­மா­னத்­ து­றை­யு­டன் அவை பகிர்ந்­து­கொள்­ளப்­படும் என்று கட்­டட, கட்­டு­மான ஆணை­யம் கூறி­யது.

இந்­தப் புதிய நட­வ­டிக்­கை­கள் இந்­திய ஊழி­யர்­களை அதி­கம் நம்­பி­யி­ருக்­கும் நிறு­வ­னங்­க­ளுக்கு முக்­கி­யம் என்று ஆணை­யம் கூறி­யது.

குறிப்புச் சொற்கள்
கட்டுமானத் துறைஇந்தியாஊழியர்கள்சீனா