தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் முகக்-க-வ-சம் அணிய தேவை-யில்லை: தென்-கொ-ரியா அறி-விப்பு

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் முகக்-க-வ-சம் அணிய தேவை-யில்லை: தென்-கொ-ரியா அறி-விப்பு

1 mins read
b9de6716-15fc-4fda-a5f9-95570eb6710e
-

சோல்: தென்­கொ­ரி­யா­வில் தடுப்பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­கள் முகக்­க­வ­சம் அணியத் தேவை­யில்லை என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மூத்­தோர் தடுப்­பூசி போட்­டுக் கொள்­வதை ஊக்­கு­விக்­கும் வகை­யில் இந்த நடை­முறை கொண்டு வரப்­பட்­டுள்­ளது.

வரும் செப்­டம்­பர் மாதத்­திற்­குள் சுமார் 70 விழுக்­காட்­டி­ன­ருக்­குத் தடுப்­பூசி போடு­வதை இலக்­காக கொண்­டுள்­ளது தென்­கொ­ரியா.

52 மில்­லி­யன் மக்­கள்­தொகை கொண்ட தென்­கொ­ரி­யா­வில் இது­வரை வெறும் 7.7 விழுக்­காட்­டி­னரே தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்­ள­னர்.

60 மற்­றும் 74 வய­துக்கு இடைப்­பட்­ட­வர்­களில் 60 விழுக்­காட்­டி­ன­ருக்கு மேல் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள பதிவு செய்­துள்­ள­னர் என்று சுகா­தார அமைச்­சர் குவான் டியோக்-சியோல் சொன்­னார்.

குறைந்­தது ஒரு­மு­றை­யா­வது தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­கள் வரும் ஜூன் மாதம் முதல் பெரிய அள­வில் ஒன்­று­கூட அனு­ம­திக்­கப் படு­வார்­கள் என்று தென்­கொ­ரிய பிர­த­மர் கிம் பூ தெரி­வித்­துள்­ளார்.

70 விழுக்­காட்­டி­ன­ருக்கு மேற் பட்­ட­வர்­கள் குறைந்­தது ஒரு தவணை தடுப்­பூ­சி­யா­வது போட்­டுக்­கொண்ட பிறகு, தனி­மைப்­

ப­டுத்­தல் கட்­டுப்­பா­டு­களில் மாற்­றம் செய்­யப்­படும் என்­றும் அவர் சொன்­னார்.