பெய்ஜிங்: சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் வியாழக்கிழமை 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பம் பதிவானது. ஒன்பது ஆண்டுகளில் இதுவே மிகவும் அதிகமான வெப்பநிலை.
பெய்ஜிங்கில் வெப்ப அலைகள் மீண்டும் வீசத்தொடங்கியதால் அங்கு வெப்பமான வானிலை நிலவும் என வானிலை ஆராய்ச்சி மையம் முன்பே எச்சரிக்கை விடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தெற்கு பெய்ஜிங்கில் அமைந்துள்ள வானிலை ஆராய்ச்சி மையத்தில் வியாழக்கிழமை பிற்பகல் 3.19 மணிக்கு 41.1 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.
இதேபோன்ற அதிகமான வெப்பநிலை கடந்த 2014ஆம் ஆண்டு மே 29ஆம் தேதி பெய்ஜிங்கில் பதிவானது. அதற்குப் பிறகு இதுவே முதல்முறை. இந்த மாதத்தின் மிகவும் வெப்பமான நாளும் இது தான் என்று வானிலை ஆராய்ச்சி மையம் குறிப்பிட்டது.