இரண்டு சில்லுத் தயாரிப்பு உலோகங்களின் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்துகிறது சீனா

நியூயார்க்: பகுதி மின்கடத்தி (செமிகண்டக்டர்), தொலைத்தொடர்பு, மின் வாகனத் துறைகளுக்கு மிக முக்கியமான இரண்டு உலோகங்களின் ஏற்றுமதிக்கு சீனா கட்டுப்பாடு விதித்துள்ளது. அமெரிக்காவுடனும் ஐரோப்பாவுடனும் தொழில்நுட்ப ரீதியாக நிலவும் வர்த்தகப் போரின் ஒரு பகுதி அது.

கேலியம், ஜெர்மேனியம் ஆகிய அந்த இரண்டு உலோகங்களும் அவற்றின் ரசாயன சேர்மங்களும் சீனாவின் தேசியப் பாதுகாப்புக்காக, ஆகஸ்ட் 1ஆம் தேதியிலிருந்து ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளுக்கு இணங்கும் வகையில் இருக்கவேண்டும் என்று அந்நாட்டின் வர்த்தக அமைச்சு கூறியது.

அந்த இரண்டு உலோகங்களுக்கான ஏற்றுமதியாளர்கள் அவற்றை நாட்டிலிருந்து வெளியேற்ற விரும்பினால், வர்த்தக அமைச்சிடமிருந்து அதற்கான உரிமத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதோடு அவர்கள் அதனை வாங்கும் வெளிநாட்டவர்களின் விவரங்கள், அவர்களின் விண்ணப்பங்கள் ஆகியவைக் குறித்தும் தகவல் தெரிவிக்கவேண்டும்.

செயற்கை நுண்ணறிவு, சில்லு உற்பத்தி என அனைத்திலும் தொழில்நுட்ப ஆதிக்கத்திற்காகப் போராடி வருகிறது, சீனா.

இந்நிலையில், சீனா மேலோங்கி இருப்பதைத் தவிர்க்க அமெரிக்கா கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் உள்ள நட்பு நாடுகளையும் அவ்வாறே செய்யும்படி அது கேட்டுக்கொண்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!