தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடைத்தொகுதியில் கத்திக்குத்து; 13 பேர் காயம்

1 mins read
2aa9e2ac-827d-4ac9-98d6-532dbe6c3a54
கத்திக்குத்துச் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் மீட்புப் பணியாளர்கள். - படம்: ராய்ட்டர்ஸ்

சோல்: தென்கொரியத் தலைநகர் சோலுக்கு தெற்கில் உள்ள நகர்ப்புறப் பகுதியில் ரயில் நிலையத்துக்கு அருகே இருக்கும் கடைத்தொகுதி ஒன்றில் நிகழ்ந்த கத்திக்குத்துச் சம்பவத்தில் குறைந்தது 13 பேர் காயமுற்றனர்.

வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் ஏகே பிளாசாவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக யோன்ஹாப் நியூஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

ஆடவர் ஒருவர் மக்களைக் கத்தியால் குத்துவதாகக் கூறி அவசரகாலப் படையினருக்குத் தகவல் கிடைத்தது.

இதில் சந்தேக ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் வேறொருவரைக் காவல்துறையினர் தேடி வருவதாகவும் ஜூங்ஆங் டெய்லி செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

நடைபாதைமீது மோதிய கார் ஒன்றிலிருந்து வெளியேறிய ஆடவர் இருவர் கடைத்தொகுதியை நோக்கி விரைந்ததாக சமூக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்