உக்ரேன் மீது ரஷ்யா ஒரே இரவில் 36 ஆளில்லா வானூர்தி தாக்குதல்களை நடத்தியுள்ளது. அதில் 27ஐ உக்ரேனின் ஆகாயப் படையின் சாதனங்கள் அழித்ததாக உக்ரேனின் விமானப்படை செவ்வாயன்று தெரிவித்தது.
ஈரானில் தயாரிக்கப்பட்ட ஷாஹெட் ஆளில்லா வானூர்தி மூலம் நடத்தப்பட்ட தாக்குதல்கள் உக்ரேனின் ஒடேசா, மைகோலைவ், கெர்சன் பகுதிகளை குறிவைத்து நடத்தப்பட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
கடந்த நாட்களில் ரஷ்யா, மோட்டார், பீரங்கி, ஆளில்லா வானூர்திகள் வழியாக 79 குண்டு வீச்சுத் தாக்குதல்களை நடத்தியதாகவும் நான்கு பேர் காயமடைந்ததுடன் பல கட்டடங்கள் சேதமடைந்ததாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி குறிப்பிட்டது.

