தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காஸாவில் ரத்தம் சிந்தக் காரணமாயிருப்பதாக இஸ்‌ரேலைச் சாடும் வடகொரியா

1 mins read
39dbb221-a9b6-47fb-9ca9-f2392c6ea40a
காஸா நகர அகதிகள் முகாம்மீது அக்டோபர் 9ஆம் தேதி இஸ்‌ரேல் மேற்கொண்ட ஆகாயத் தாக்குதலால் ஏற்பட்ட சேதத்தைப் பார்வையிடும் பாலஸ்தீனர்கள். - படம்: ராய்ட்டர்ஸ்

சோல்: காஸாவில் பலர் ரத்தம் சிந்தக் காரணமாயிருப்பதாக இஸ்‌ரேலை வடகொரியா சாடியுள்ளது.

வடகொரிய அரசாங்க ஊடகம் அவ்வாறு கூறியுள்ளது.

இஸ்‌ரேலுக்கும் பாலஸ்தீன ஹமாஸ் குழுவிற்கும் இடையிலான மோதல் குறித்து பியோங்யாங் கருத்துரைத்திருப்பது இதுவே முதல்முறை.

வெளிநாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி, இஸ்‌ரேலில் நிலவும் சர்ச்சை குறித்தும் அங்கு நேர்ந்த உயிரிழப்புகள் குறித்தும் ‘ரோடோன் சின்முன்’ செய்தித்தாள் கட்டுரை ஒன்றை வெளியிட்டது.

“இஸ்‌ரேல், பாலஸ்தீன மக்கள்மீது தொடர்ந்து குற்றச்செயல்களை மேற்கொள்வதன் எதிரொலியாகத்தான் இந்த மோதல் மூண்டுள்ளதாக அனைத்துலகச் சமூகம் கருதுகிறது. தனி பாலஸ்தீன நாட்டை உருவாக்குவதே இதற்கான அடிப்படைத் தீர்வாக அமையும்,” என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹமாஸ் குழுவின் தாக்குதலில் கிட்டத்தட்ட 1,500க்கு மேற்பட்டோர் உயிரிழந்ததை அடுத்து அனைத்துலக நாடுகள் இஸ்‌ரேலுக்கு ஆதரவு தெரிவித்துவரும் வேளையில் இந்தக் கட்டுரை வெளிவந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்