வரவுசெலவுத் திட்ட உரையில் திருக்குறளை மேற்கோள்காட்டிய அன்வார்

கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் வெள்ளிக்கிழமை தமது வரவுசெலவுத் திட்டத்தின் மீதான உரையில் திருக்குறளை மேற்கோள்காட்டி பேசினார்.

”இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த

வகுத்தலும் வல்ல தரசு”

என்று திருக்குறளை தமிழில் எடுத்துக்கூறினார்.

முறையாக நிதி ஆதாரங்களை வகுத்து, அரசாங்க கருவூலத்திற்கான வருவாயைப் பெருக்கி, அதை பாதுகாத்துத் திட்டமிட்டு செலவிடுவதுதான் திறமையான நல்லாட்சிக்கு இலக்கணமாகும் என்று மலாய் மொழியில் குறளுக்கு விளக்கமும் கூறியபோது நாடாளுமன்றத்தினர் அவரது மொழிப் புலமையை வியந்து பாராட்டினர்.

சீன கன்பூசிய தத்துவஞானியான ‘மாஸ்டர் மெங்’ என்றழைக்கப்படும் மென்சியஸ் கருத்துகளையும் அன்வார் சுட்டிப் பேசினார்.

எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும் பிரதமராக பதவி வகிக்கும் காலத்திலும் அன்வார் திருக்குறளைத் தம் உரையில் எடுத்துக்காட்டிப் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் என்று மலேசிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களும் பெருமையுடன் தெரிவித்துள்ளனர்.

Remote video URL
Remote video URL
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!