வடகொரிய செயற்கைக்கோளுக்கு ரஷ்யா உதவி செய்துள்ளது: தென்கொரியா

சோல்: வடகொரியா, நவம்பர் 21ஆம் தேதி, அதன் வேவுப் பணிக்கான செயற்கைக்கோளை ஏந்திச் செல்லும் உந்துகணையை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. ரஷ்யா அதற்கு உதவி செய்ததாகத் தென்கொரியா கூறியுள்ளது.

உளவுத்துறைத் தகவலை மேற்கோள்காட்டி தென்கொரிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவ்வாறு கூறினர்.

அந்த செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் முயற்சியில் வடகொரியா ஏற்கெனவே இரண்டு முறை தோல்வியுற்றது.

வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் செப்டம்பரில் ரஷ்யா சென்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புட்டினைச் சந்தித்தார். அப்போது, பியோங்யாங் செயற்கைக்கோள்களை உருவாக்க உதவுவதாக திரு புட்டின் உறுதியளித்திருந்தார்.

அதன் பிறகு, முன்னர் தோல்வியில் முடிந்த முயற்சிகளின் தரவுகளை வடகொரியா ரஷ்யாவிற்கு அனுப்பியதாகவும் ரஷ்ய வல்லுநர்கள் அவற்றை ஆய்வுசெய்ததாகவும் தென்கொரியா கூறியது.

குவாமில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தை தங்கள் செயற்கைக்கோள் படமெடுத்து அனுப்பியதாகவும் நவம்பர் 22ஆம் தேதி, திரு கிம் அவற்றைப் பார்வையிட்டதாகவும் வடகொரியாவின் அரசாங்க ஊடகம் தெரிவித்துள்ளது.

வடகொரியா அது தொடர்பான காணொளியை வெளியிட்டால் மட்டுமே அந்தத் தகவலின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய இயலும் என்கிறது தென்கொரியா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!