தைப்பே: சீனாவின் போர் கப்பல்களும், போர் விமானங்களும் தைவான் பகுதிகளுக்கு அருகே வந்து செல்வதாக தைவான் புகார் கூறியுள்ளது.
மேலும் சீன போர் விமானம் ஒன்று சர்ச்சைக்குரிய தைவான் நீர்நிலையைக் கடந்துள்ளதாகவும் அது கூறியுள்ளது. வியாழக்கிழமை காலை இந்த நடவடிக்கைகள் இடம்பெற்றதாக தைவான் தெரிவித்துள்ளது.
எல்லைகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தைவானிய அரசாங்கம் கூறியுள்ளது.
தைவானில் ஜனவரி மாதம் பொதுத் தேர்தல் நடக்க இருக்கும் நேரத்தில் சீனாவின் ராணுவ நடவடிக்கைகள் அவ்வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.
ஜனநாயக ஆட்சியை கொண்டுள்ள தைவானை சீனா தமது நிலப்பரப்பின் ஒரு பகுதி என்று கூறிவருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக சீனா தைவான் அருகே ராணுவ நடவடிக்கைகளை அதிகரித்தும் வருகிறது.
ஜனவரி 13ஆம் தேதி தைவானில் அதிபர் தேர்தலும் நாடாளுமன்ற தேர்தலும் நடக்கிறது. அதற்கான பிரசார பணிகளும் தீவிரமாக நடந்துவருகிறது.
சீனாவுடனான உறவு குறித்து தேர்தல் பிரசாரத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.