எல்லைகளில் சீனாவின் அச்சுறுத்தல் அதிகரிக்கிறது: தைவான்

தைப்பே: சீனாவின் போர் கப்பல்களும், போர் விமானங்களும் தைவான் பகுதிகளுக்கு அருகே வந்து செல்வதாக தைவான் புகார் கூறியுள்ளது.

மேலும் சீன போர் விமானம் ஒன்று சர்ச்சைக்குரிய தைவான் நீர்நிலையைக் கடந்துள்ளதாகவும் அது கூறியுள்ளது. வியாழக்கிழமை காலை இந்த நடவடிக்கைகள் இடம்பெற்றதாக தைவான் தெரிவித்துள்ளது.

எல்லைகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தைவானிய அரசாங்கம் கூறியுள்ளது.

தைவானில் ஜனவரி மாதம் பொதுத் தேர்தல் நடக்க இருக்கும் நேரத்தில் சீனாவின் ராணுவ நடவடிக்கைகள் அவ்வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.

ஜனநாயக ஆட்சியை கொண்டுள்ள தைவானை சீனா தமது நிலப்பரப்பின் ஒரு பகுதி என்று கூறிவருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக சீனா தைவான் அருகே ராணுவ நடவடிக்கைகளை அதிகரித்தும் வருகிறது.

ஜனவரி 13ஆம் தேதி தைவானில் அதிபர் தேர்தலும் நாடாளுமன்ற தேர்தலும் நடக்கிறது. அதற்கான பிரசார பணிகளும் தீவிரமாக நடந்துவருகிறது.

சீனாவுடனான உறவு குறித்து தேர்தல் பிரசாரத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!