பெய்ஜிங்: கடுமையான பனிமூட்டத்தால் வியாழக்கிழமை சீன மாநிலங்களில் சுற்றுப்புறம் இருண்டு, நெடுஞ்சாலைகள் மூடப்பட்டன; ஷாங்காயிலிருந்து விமானப் பயணங்கள் தாமதிக்கப்பட்டன. இதனால், வானிலை முன்னறிவிப்பாளர்கள் எச்சரிக்கைகள் வெளியிட்டார்கள்.
இக்கடும் பனிமூட்டம், ஷான்டாங், ஹூபே, ஹுனான், ஜியாங்சி, ஃபுஜியான்,தெற்கு ஜியாங்சு, தெற்கு அன்ஹுய் போன்ற மாநிலங்களையும் பாதித்தது என்று சீனாவின் தேசிய வானிலை மையம் தெரிவித்தது.
பனிமூட்டத்தின் ஆபத்தான நிலையை குறிக்க, அன்ஹுய்யின் சில பகுதிகளில் சிவப்பு நிற எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டன. மேலும் பல நெடுஞ்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டன என்று மாநில ஊடகமான சிசிடிவி தெரிவித்தது.
அதுமட்டுமில்லாமல்,சீனாவின் கிழக்கு ஜியாங்சு மாநிலத்தில் தலைநகரான நான்ஜிங்கின் பல பகுதிகளும் கடுமையான பனிமூட்டத்தால் பாதிக்கப்பட்டதால் பொதுப் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டன.