சீனா நிலச்சரிவு பலி 11 ஆனது

பெய்ஜிங்: சீனாவின் தென்மேற்கு யுனான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் மாண்டுபோனவர்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை (ஜனவரி 23) பதினொன்றாக அதிகரித்துள்ளது.

நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் உள்ள ஆழமான மண் மேடுகளுக்கிடையே  சிக்கிக்கொண்டவர்களைத் தேடி மீட்கும் பணியில் மீட்புக் குழு ஈடுபட்டது. இருப்பினும், உறுதியற்ற நிலம் காரணமாக பெரிய இயந்திரங்களைப் பயன்படுத்தி மீட்புப் பணியை மேற்கொள்ள இயலாது என்று மீட்பாளர் ஒருவர் கூறியுள்ளார். 

திங்கட்கிழமை (ஜனவரி 22) காலை 5.51 மணிக்கு ஏற்பட்ட நிலச்சரிவில் 18 வீடுகள் புதையுண்டன.  அதில் காணாமல் போன 47 பேரில், எட்டுப் பேர் மாண்டுபோனதாக அறிவிக்கப்பட்டது. தலையிலும்  உடலிலும்  காயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மலைச்சரிவின் மேல்பகுதியில் உள்ள செங்குத்தான ஒரு பாறை விளிம்பில் நிலச்சரிவு ஏற்பட்டதாக  அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!