மூச்சுவிடத் திணறும் பேங்காக்

புக்கெட்: தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் வியாழக்கிழமையன்று (பிப்ரவரி 15) காற்றின் தரம் மிக மோசமாக இருந்தது. காற்றுத் தூய்மைக்கேட்டால் அந்நகரம் திணறியது.

இதனையடுத்து, பிப்ரவரி 15,16 என இரு நாள்களுக்கு ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யுமாறும் அந்நகர ஆளுநர் சட்சார்ட் சிட்டிபுன்ட் கேட்டுக்கொண்டார்.

ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று முதலாளிகளையும் நிறுவனங்களையும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். வீட்டில் இருந்து வேலை செய்வதன் மூலம் 11 மில்லியன் மக்கள் காற்று தூய்மைக்கேட்டில் இருந்து தப்பமுடியும் என்று அவர்கள் கூறினர்.

இந்நிலையில், காற்றுத்தரம் வெள்ளிக்கிழமையும் மோசமாக இருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

காற்றின் தரத்தை கண்காணிக்கும் ‘ஐகியூஏர்’ இணையத்தளம் பேங்காக் நகரில் காற்றுத் தரம் ஆக மோசமாக உள்ளது என்று குறிப்பிட்டது.

உலகச் சுகாதார நிறுவனம் குறிப்பிட்ட அளவைவிட காற்றில் ஆபத்தான துகள்கள் 15 மடங்கு அதிகமாக இருப்பதாக ‘ஐகியூஏர்’ இணையத்தளம் கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!