சீனாவில் குழந்தை பிறப்பு அதிகரிப்பு; மக்கள்தொகை அதிகரிக்க வாய்ப்பு

ஹாங்காங்: பிறந்திருக்கும் கடல்நாக ஆண்டில் சீனாவில் உள்ள மருத்துவமனைகளில் குழந்தை பிறப்பு அதிகரித்து உள்ளதாக ‘யிக்காய்’ எனப்படும் நிதிச் செய்தி நிலையம் தெரிவித்து உள்ளது.

குழந்தை பிறப்பது தொடர்ந்து அதிகரித்தால், ஏற்கெனவே வீழ்ச்சி அடைந்து வரும் மக்கள்தொகை எண்ணிக்கையை இவ்வாண்டு உயர்த்த அது கைகொடுக்கும் என்றும் மக்கள்தொகை தொடர்பான கொள்கைகளை வகுப்போருக்கு மகிழ்ச்சியைத் தரும் என்றும் அச்செய்தி நிலையம் குறிப்பிட்டு உள்ளது.

சீனர்களின் சோதிடக் கணிப்புப்படி கடல்நாக ஆண்டு அதிர்ஷ்டத்தைத் தரக்கூடியது.

இம்மாதம் (பிப்ரவரி) 10ஆம் தேதி கடல்நாகப் புத்தாண்டு பிறந்தது முதல் குழந்தை பிறப்பு ‘கணிசமாக’ அதிகரித்திருப்பதை மருத்துவமனைகளில் இருந்து திரட்டப்பட்ட தகவல்கள் தெரிவிப்பதாக ‘யிக்காய்’ கூறியது.

எடுத்துக்காட்டாக, கிழக்கு சீனாவில் உள்ள ஊக்ஸி மருத்துவமனையை அது குறிப்பிட்டது.

புத்தாண்டு பிறந்த பின்னர், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் குழந்தை பிறப்பு அந்த மருத்துவமனையில் 20 விழுக்காடு அதிகரித்துள்ளது.

அதேபோல, வடமேற்கு ஷான்ஸி மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் குழந்தை பிறப்பு 72 விழுக்காடு அதிகரித்திருப்பதையும் அந்தச் செய்தி எடுத்துக்காட்டியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!