பிரசல்ஸ்: சுற்றுச்சூழல் குற்றங்களுக்கான தண்டனைகளைக் கடுமையாக்க ஐரோப்பிய நாடாளுமன்றம் பிப்ரவரி 27ஆம் தேதியன்று ஒப்பதல் அளித்தது.
சட்டவிரோதமாக மரங்களை வெட்டி அவற்றை விற்பதும் சுற்றுச்சூழல் குற்றங்களின்கீழ் வரும்.
இத்தகைய குற்றங்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.
சம்பந்தப்பட்ட நிறுவன இயக்குநர்களுக்கு எதிராகவும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளிலும் இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
நீர் வளங்களைச் சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தி நீர் பற்றாக்குறையை ஏற்படுத்துவது, ஐரோப்பிய ஒன்றியத்தின் ரசாயனச் சட்டத்தை மீறுவது, கப்பல்களால் சுற்றுச்சூழல் மாசடைதல், காட்டுத் தீ காரணமாகவோ அல்லது காற்று, நீர், மண் மாசடைதல் காரணமாகவோ சுற்றுசூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவது ஆகியவற்றுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.