லஞ்சப் பணத்தைக் கொண்டு 13 வீடுகளை வாங்கிய அதிகாரி

பெய்ஜிங்: லஞ்சமாகப் பெற்ற பணத்தைக் கொண்டு ஓய்வுபெற்ற சீன அதிகாரி ஒருவர் 13 வீடுகளை வாங்கிய விவகாரம் சீனாவில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

உயர்மட்ட ஊழல் தடுப்பு அதிகாரி ஒருவர் இந்த விவகாரத்தை அம்பலப்படுத்தினார்.

சீனாவின் வடமேற்கு மாநிலமான ஷான்ஸியைச் சேர்ந்த முன்னாள் வனத்துறை அதிகாரியான ஹி ஃபாலி, 2017ல் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் சொத்துகளை வாங்கினார்.

ஏறக்குறைய 40 மில்லியன் யுவான் (S$7.5 மி.) மதிப்பில் லஞ்சம் பெற்றதற்காக 2022ல் அவருக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

சமூக ஊடகங்களில் அதிகம் பேசப்படும் விவகாரமாக இது உருவெடுத்துள்ளது. வியாழக்கிழமை நிலவரப்படி, வெய்போவில் மில்லியன் கணக்கான பார்வைகளை இது பெற்றுள்ளது.

இதுகுறித்து பலரும் கேலியான கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர், “அவரால் 130 வீடுகளை வாங்கியிருக்க முடியும்,” என்றார்.

இப்போது 70 வயதாகும் ஹி, 2003ல் ஷான்ஸியின் சுற்றுச்சூழல் பிரிவுத் தலைவரானார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!