நாய்க்கூண்டில் அடைத்து மகனைக் கொடுமைப்படுத்திய தாய்க்கு 20 ஆண்டுச் சிறை

வியன்னா: ஆஸ்ட்ரியாவில் தனது மகனை சிறிய நாய்க்கூண்டில் அடைத்துவைத்து, பட்டினிபோட்டுக் கொடுமைப்படுத்திய 33 வயதுப் பெண்ணுக்கு 20 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு ஜூலை முதல் நவம்பர் வரை மகனைப் பல சம்பவங்களில் அவர் அடித்ததாகக் கூறப்பட்டது. அப்போது அச்சிறுவனுக்கு வயது 12.

அவ்வாறு அடித்தது, பட்டினி போட்டது, நாய்க்கூண்டில் அடைத்து வைத்தது, மிகவும் குளிர்ந்த நீரை சிறுவன்மேல் ஊற்றியது ஆகியவை தொடர்பில் பிப்ரவரி 26ஆம் தேதி அப்பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டது.

ஆஸ்ட்ரியாவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள கிரெம்ஸ் நகர நீதிமன்றம், அப்பெண் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளி என்று பிப்ரவரி 29ஆம் தேதி தீர்ப்பளித்தது. அவற்றில் கொலை முயற்சிக் குற்றச்சாட்டும் அடங்கும்.

இக்குற்றங்களில் உடந்தையாக இருந்த அப்பெண்ணின் 40 வயதுத் தோழிக்கும் 14 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தாயின் கொடிய செயல்களை அத்தோழி தூண்டிவிட்டதாகக் கூறப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!