இயந்திரத்திற்குள் பயணி காசுகளை வீசியதால் விமானம் புறப்பட நான்கு மணி நேரம் தாமதம்

பெய்ஜிங்: சீனாவில் சன்யாவில் இருந்து பெய்ஜிங்கிற்கு கடந்த புதன்கிழமை சைனா சௌதர்ன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்படுவதற்கு நான்கு மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.

விமான இயந்திரத்திற்குள் பயணி ஒருவர் காசுகளை வீசியதே அதற்குக் காரணம் என்று சிஎன்என் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

காசுகளை வீசியதாகச் சந்தேகிக்கப்படும் பயணியிடம் விமானச் சிப்பந்தி ஒருவர் விசாரிப்பதைக் காட்டும் காணொளி இணையத்தில் வலம் வந்தது.

அடையாளம் தெரியாத அந்தப் பயணி, விமான இயந்திரத்திற்குள் மூன்று முதல் ஐந்து காசுகள் வரை வீசியதை ஒப்புக்கொண்டார். அதிர்ஷ்டம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தாம் இச்செயலைப் புரிந்ததாக அவர் கூறினார்.

அவரது மூடநம்பிக்கையான செயலால் காலை 10 மணிக்குப் புறப்பட வேண்டிய விமானம், தாமதமாக பிற்பகல் 2.16 மணிக்குப் புறப்பட்டது. பொறியாளர்கள் முழுமையான பாதுகாப்புப் பரிசோதனை மேற்கொண்ட பிறகே விமானம் புறப்பட்டது.

சம்பந்தப்பட்ட பயணியின் பொறுப்பற்ற செயலை சைனா சௌதர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனம் சாடியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!