இந்தோனீசியா-சிங்கப்பூர் வரும் பயணிகள் எண்ணிக்கை 30% அதிகரிப்பு

ஜகார்த்தா: சிங்கப்பூரில் நடக்கும் டெய்லர் சுவிஃப்ட் இசை நிகழ்ச்சியைக் காண இந்தோனீசியர்கள் பலர் சிங்கப்பூருக்கு வருகின்றனர்.

இதனால், இந்­தோ­னீ­சி­யா­வின் விமான நிறு­வ­ன­மான கருடா மூலம் சிங்கப்பூருக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க வகையில் உயர்ந்துள்ளதாக ‘ஜகார்த்தா போஸ்ட்’ நாளிதழ் வெள்ளிக்கிழமை (மார்ச் 8) தெரிவித்தது.

டெய்லர் சுவிஃப்ட் இசை நிகழ்ச்சி நடக்கும் நாள்களில் இந்தோனீசியாவிலிருந்து சிங்கப்பூருக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை 30 விழுக்காடு அதிகரித்துள்ளதாக கருடா நிறு­வ­னத்­தின் தலை­வ­ரும் தலைமை நிர்­வாக அதி­கா­ரி­யு­மான திரு இர்­ஃபான் செட்­டி­யபுத்ரா வியாழக்கிழமையன்று (மார்ச் 7) தெரிவித்தார்.

பெரும்பாலானோர் ஜகார்த்தா, பாலி ஆகிய இடங்களிலிருந்து பயணம் செய்ததாகவும் சுரபாயாவிலிருந்து சிங்கப்பூருக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை கணிசமான அளவு உயர்ந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

“சுவிஃப்ட் இசைநிகழ்ச்சிகள் கணிசமான இந்தோனீசிய பார்வையாளர்களை ஈர்த்துள்ளன. குறிப்பாக, புதுமையான அனுபவங்களைப் பெறவும் தங்கள் சமூக ஊடக கணக்கை மேம்படுத்தவும் துடிக்கும் இளையர் சமூகத்தை இந்த நிகழ்ச்சி கவர்ந்துள்ளது,” என திரு இர்ஃபான் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!