ஜகார்த்தா: இந்தோனீசியாவின் சுமத்ரா தீவில் திடீர் வெள்ளத்தாலும் நிலச்சரிவாலும் குறைந்தது 10 பேர் மாண்டனர்.
மேலும், குறைந்தது 10 பேரைக் காணவில்லை. உள்ளூர் அதிகாரி ஒருவர் சனிக்கிழமையன்று (மார்ச் 9) இத்தகவல்களை வெளியிட்டார்.
காணமற்போனவர்களைத் தேடும் பணிகளுக்கு மோசமான வானிலை இடையூறாக இருக்கிறது என்று பெசிசிர் செல்லாட்டான் பேரிடர் தடுப்பு அமைப்பின் தற்காலிகத் தலைவர் டோனி யுஸ்ரிஸால் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
மேற்கு சுமத்ராவில் உள்ள பெசிசிர் செலாட்டான் பகுதியில் தொடர் மழையால் வெள்ளம் சூழ்ந்தது, நிலச்சரிவு ஏற்பட்டது. சுமார் 46,000 பேர் வீடுகளிலிருந்து வெளியேறி தற்காலிகப் பாதுகாப்பு முகாம்களில் தஞ்சம் புகுந்தனர்.
நிலச்சரிவில் குறைந்தது 14 வீடுகள் புதைந்துபோனதாகவும் 20,000க்கும் அதிகமான வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததாகவும் திரு டோனியின் அறிக்கை குறிப்பிட்டது. எட்டு பாலங்கள் இடிந்து விழுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேற்கு சுமத்ராவின் பாடாங் பரியாமான் பகுதியில் புதன்கிழமை (மார்ச் 7), வியாழக்கிழமை (மார்ச் 8) பெய்த கனமழையால் ஆறுகளில் நீரின் அளவு அதிகரித்ததால் வெள்ளம் சூழ்ந்ததுடன் நிலச்சரிவு ஏற்பட்டது; அதனால் குறைந்தது மூவர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.