தொப்புள் கொடியுடன் உயர் மாடியிலிருந்து தூக்கி எறியப்பட்ட குழந்தை இறந்தது

கோலாலம்பூர்: தொப்புள் கொடியோடு ஆண் குழந்தை ஒன்று, மார்ச் 9ஆம் தேதியன்று மலேசியாவின் ஸ்ரீ பெட்டாலிங் பகுதியிலுள்ள கூட்டுரிமைக் கட்டடம் ஒன்றிலிருந்து கீழே தூக்கி எறியப்பட்டதில் அது மரணமடைந்தது.

குழந்தை உயர்மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்டிருக்கலாம் என்றும் அந்த சிசுவின் தலையின் ஒரு பகுதி சிதைந்த நிலையில் இருந்தது என்றும் பிரிக்ஃபீல்ட்ஸ் காவல்படைத் தலைவர் கூ மஷரிமான் தெரிவித்தார்.

இன்னும் தொப்புள் கொடி இணைக்கப்பட்ட நிலையில் அந்தக் குழந்தை இருந்ததால் தூக்கி எறியப்பட்டதற்கு முன்புதான் அது பிறந்திருக்கும் என்று நம்பப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பில் குழந்தையின் பெற்றோரை அடையாளம் காணவும் அல்லது சம்பந்தப்பட்ட நபர்களைக் கண்டறியவும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து, சம்பவத்தைப் பார்த்ததாக நம்பப்படும் இருவரிடமிருந்து வாக்குமூலம் பெற்றுள்ளதாகக் காவல்துறையினர் மார்ச் 10ஆம் தேதியன்று தெரிவித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!