அபின் உற்பத்தியில் லாபம் பார்க்கும் மியன்மார் விவசாயிகள்

நேப்பிடோ: மியன்மாரின் தொலைதூரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் சிலர் அபின் உற்பத்தி மூலம் லாபம் பார்க்க முனைந்துள்ளனர்.

சென்ற ஆண்டு (2023) மியன்மார் உலகின் ஆக அதிக அபின் உற்பத்தியாளராக விளங்கியதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் (ஐநா) கூறியது. அதுவரை அந்த நிலையிலிருந்த ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசாங்கம் அபின் வளர்ப்பைத் தடை செய்ததையடுத்து மியன்மார் அப்பட்டியலில் முதலிடம் பிடித்தது.

2021ஆம் ஆண்டு நடந்த ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு வாழ்வாதாரத்திற்குப் போராடிவரும் மியன்மார் விவசாயிகள், பணப்பயிராகக் கருதப்படும் அபினை வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

அபின் செடிகளிலிருந்து ‘ஹெராயின்’ தயாரிக்கப்படுவதால் அவற்றை வளர்ப்பதன்மூலம் விவசாயிகளுக்கு லாபம் கிட்டுகிறது.

மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் அபின் செடிகளைப் பயிரிட்டால் கிட்டத்தட்ட 16 கிலோ அபின் ‘பிசின்’ கிடைக்கும் என்றும் அது ஏறக்குறைய $4,500 அமெரிக்க டாலர் (S$6,000) ஈட்டித்தரும் என்றும் கூறப்படுகிறது.

எனவே, அரிசி, சோளம் போன்றவற்றைப் பயிரிட்ட விவசாயிகளின் கவனம் அபின் பக்கம் திரும்பியுள்ளது.

மியன்மார் சென்ற ஆண்டு, 1,080 மெட்ரிக் டன் அபினை உற்பத்தி செய்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அது அதிகரிக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!