பயணி உயிரை மாய்த்துக்கொள்ள முற்பட்டதால் விமானம் அவசரமாக தரையிறக்கம்

லண்டன்: தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் இருந்து பிரிட்டிஷ் தலைநகர் லண்டனுக்குச் சென்றுகொண்டிருந்த விமானத்தில் பயணி ஒருவர் உயிரை மாய்த்துக்கொள்ள முற்பட்டதால் அந்த விமானம் அவசரமாக தரையிறங்க நேரிட்டது.

தைவானுக்குச் சொந்தமான இவிஏ ஏர் விமானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இச்சம்பவம் நிகழ்ந்ததாக தி சன் நாளேடு தெரிவித்தது.

விமானத்தின் கழிவறையில் அந்தப் பயணி உயிரை மாய்த்துக்கொள்ள முற்பட்டதை விமானப் பணியாளர்கள் கண்டறிந்தனர். அவர்களும் விமான மருத்துவப் பணியாளர்களும் உடனடியாக தலையிட்டு அந்தப் பயணிக்கு உதவினர்.

உள்ளூர் நேரப்படி இரவு 7.30 மணியளவில் லண்டனில் உள்ள விமான நிலையம் ஒன்றில் விமானம் தரையிறங்கியதும், அந்தப் பயணிக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டது. கூடுதல் சிகிச்சைக்காக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

பிஆர்67 பேங்காக்-லண்டன் விமானத்தில் வெள்ளிக்கிழமை இச்சம்பவம் நிகழ்ந்ததை இவிஏ ஏர் விமான நிறுவனம் உறுதிப்படுத்தியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!