ஆஸ்திரேலிய வெள்ளத்தில் சிக்கிய நூற்றுக்கணக்கானோர் மீட்பு

சிட்னி: ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து அப்பகுதியில் இயற்கைப் பேரிடர் ஏற்பட்டுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 7) அறிவிக்கப்பட்டது.

வார இறுதியில் கனமழை காரணமாக சிட்னி நகரின் வடகிழக்குப் பகுதியில் உள்ள 300 வீடுகளில் உள்ளவர்கள் அப்புறப்படுத்தப்பட்டதாக அவசரநிலை சேவை மையம் தெரிவித்தது.

மிகக் குறுகிய காலத்தில் மாநிலம் முழுவதும் வெள்ளநீர் பரவலாக சேதத்தை ஏற்படுத்தியதாக அவசரநிலை நிர்வாகத்துக்கான மத்திய அமைச்சர் கேத்தரின் கிங் விளக்கினார்.

இந்தப் பேரிடர் ஏற்படுத்திய தாக்கம், சேதம் ஆகியவற்றை நியூ சவுத் வேல்ஸ் அரசு தொடர்ந்து மதிப்பிட்டு வருவதாக திருவாட்டி கிங் கூறினார்.

பல பகுதிகளில் உள்ள சாலைகள் சேதமடைந்ததாலும் வெள்ளப் பெருக்கால் துண்டிக்கப்பட்டதாலும் கிட்டத்தட்ட 200 மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக அவசரநிலை சேவையை நிர்வகிக்கும் அம்மாநில அமைச்சர் ஜிகாத் டிப் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டோருக்கு உதவ ஏறக்குறைய 5,000 தொண்டூழியர்கள் இரவு முழுக்கப் பணியாற்றியதாக அவர் சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!