இந்தோனீசிய எரிமலை வெடிப்பால் மலேசிய விமானப் போக்குவரத்து பாதிப்பு

பெட்டாலிங் ஜெயா: இந்தோனீசியாவில் உள்ள ருவாங் எரிமலை வெடிப்புக் காரணமாக மலேசியா, சாபா, சரவாக் ஆகியவற்றுக்கு இடையேயான விமானப் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்ப சில வாரங்கள் ஆகும் என மலேசிய வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பெரும்பாலும் காற்று வீசும் திசை, எரிமலை வெடிப்பின் தீவிரம் ஆகியவற்றைச் சார்ந்து விமானப் போக்குவரத்து இருக்கும் எனவும் குறிப்பாக, மே மாதம் நடுப்பகுதி வரை விமானச் சேவையில் இடையூறு ஏற்படலாம் எனவும் பருவநிலை நிபுணர் அஜிசன் அபு சாமா வியாழக்கிழமை (ஏப்ரல் 18) கூறினார்.

மேலும், தற்போது வீசும் காற்றின் திசைக்கு ஏற்ப எரிமலையின் சாம்பல் எந்த உயரத்தில், எந்தத் திசையில் பரவும் என்பதை நாம் முன்கூட்டியே கணிப்பது அவசியம் என்றார் அவர்.

“நாம் தப்போது இடைப்பட்ட பருவமழைக் காலத்தில் இருக்கிறோம். தென்மேற்குப் பருவமழை தொடங்கும் மே மாதம் வரை வானிலை தெளிவாக இருக்காது. எரிமலையிலிருந்து வெளியேறும் அடர்ந்த புகையானது காற்றில் எந்தளவு பரவும் என்பதைத் தற்போது கணிக்கமுடியாது என்பதே முக்கியப் பிரச்சினையாக உள்ளது. விமானங்களுக்குச் சேதம் அல்லது செயலிழப்பை ஏற்படுத்தக்கூடிய கரும்புகை இருக்கும் சூழலில் விமானங்கள் பறப்பதை நாங்கள் விரும்பவில்லை,” என திரு அஜிசன் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!