டிரம்ப் வழக்கு: நீதிமன்றத்துக்கு வெளியே ஆடவர் தீக்குளிப்பு

நியூயார்க்: ஆபாசப் பட நடிகையிடம் பணம் கொடுத்தது தொடர்பாக ஏப்ரல் 19ஆம் தேதியன்று முன்னாள் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பிற்கு எதிராக நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது.

அப்போது அந்த நீதிமன்றத்துக்கு வெளிய ஆடவர் ஒருவர் தீக்குளித்தார்.

அவர் டிரம்ப்பைக் குறிவைக்கவில்லை என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.

அந்த ஆடவர் பல நிமிடங்களுக்குத் தீப்பிடித்து எரிந்ததாகவும் டிரம்ப்பைக் காணொளி எடுக்க நீதிமன்றத்துக்கு வெளியே தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்த பல செய்தி நிறுவனங்களின் கேமராக்களில் அக்கோரக் காட்சி பதிவானதாகவும் நியூயார்க் காவல்துறை கூறியது.

நீதிமன்றத்துக்கு வெளியே ஆடவர் தீக்குளித்ததைப் பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

அந்த ஆடவர் படுகாயம் அடைந்ததாகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் கூறினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!