தாய்லாந்து வெளியுறவு அமைச்சர் பதவி விலகல்

பேங்காக்: தாய்லாந்து அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டதை அடுத்து, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் பார்ன்பிரீ பஹிடா நுகாரா பதவி விலகியுள்ளார். இந்தத் தகவலை தாய்லாந்து அரசாங்கம் ஏப்ரல் 28ஆம் தேதியன்று வெளியிட்டது.

அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டபோது துணைப் பிரதமர் பதவியிலிருந்து திரு பார்ன்பிரீ நீக்கப்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்து அவர் வெளியுறுவு அமைச்சர் பதவியிலிருந்து விலகியதாகவும் கூறப்படுகிறது.

மியன்மாரில் ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு காண தாய்லாந்து முன்வந்துள்ள நிலையில் திரு பார்ன்பிரீ பதவி விலகியுள்ளார்.

இதற்கான குழுவுக்குத் திரு பார்ன்பிரீ தலைமை தாங்கினார்.

அவரது எதிர்பாரா பதவி விலகலை அடுத்து, அக்குழுவுக்கு இனி யார் தலைமை தாங்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

திரு பார்ன்பிரீ இல்லாததால் மியன்மாருக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தை பெரிதும் பாதிப்படையும், தடைபடும் என்று அஞ்சப்படுகிறது.

காஸாவில் ஹமாஸ் அமைப்பால் பிணை பிடிக்கப்பட்ட தாய்லாந்து நாட்டவர்களின் விடுதலைக்கு திரு பார்ன்பிரீ முக்கிய காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!