பிரேசில் வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

பிரேசில் வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

1 mins read
0afc1061-ef5b-45ca-b09d-61becd88ec76
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளிலிருந்து குடியிருப்பாளர்கள் படகுகள் மூலம் வெளியேற்றப்பட்டனர். - படம்: இபிஏ

ரியோ டி ஜெனிரோ: பிரேசிலின் தென்பகுதியில் பெய்த கனமழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரித்துள்ளது.

ரியோ கிராண்டே டோ சூல் மாநிலத்தில் மேலும் 125 பேரைக் காணவில்லை என்று குடிமைத் தற்காப்பு அமைப்பு, மே 11ஆம் தேதி கூறியது.

புயல், மழை, வெள்ளம் ஆகியவற்றால் கிட்டத்தட்ட 537,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டது.

ஏறத்தாழ 446 நகர்ப்புறங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 2.1 மில்லியனுக்கும் மேற்பட்டோர் அவதியுறுகின்றனர்.

மேலும் கனமழை பெய்யும் என்று முன்னுரைத்துள்ள வானிலை ஆய்வகம், ஆறுகள் நிரம்பி வழியும் என்று கவலை தெரிவித்துள்ளது.

ஆக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள பிரேசிலின் தென் மாநிலம், புவியியல் அமைப்பு ரீதியாக அதிக மழைப்பொழிவைப் பெறும் இடமாக விளங்குகிறது.

பருவநிலை மாற்றத்தால் அந்த வட்டாரத்தில் மழைப்பொழிவு மேலும் கடுமையாகி வருவதாக பிரேசில் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
பிரேசில்வெள்ளம்உயிரிழப்பு