தடையிருந்தும் வடகொரியாவுக்கு எண்ணெய் ஏற்றுமதி; வர்த்தகருக்குச் சிறை

1 mins read
2360c7be-0d0d-41a7-8b33-40915950aa61
ஜஸ்டின் லாவ் எங் யியாவ் என்பவர் ஐநா தடைகள் இருப்பது தெரிந்திருந்தும் வடகொரியாவுக்கு எண்ணெய் விற்க உதவினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

எண்ணெய் வர்த்தகர் ஒருவர் கப்பல் தரகர் ஒருவருடன் நட்பு ஏற்பட்டபின், சொந்த வர்த்தக நிறுவனம் ஒன்றைத் தொடங்கி அவருக்கு எண்ணெய் விற்பனை செய்பவராக மாறினார்.

​இதற்காக அவர் அந்தத் தரகரின் வாடிக்கையாளர்களுக்காக எண்ணெய்ப் பொருள்களை வாங்கி தரகரின் வாடிக்கையாளர்களுக்கு அவற்றை விற்பனை செய்வார். அதில் கிடைக்கும் லாபத்தை அவரும் அந்தத் தரகரும் பங்குபோட்டுக் கொள்வர்.

​ஜஸ்டின் லாவ் எங் யிவாவ் என்ற அந்த எண்ணெய் வர்த்தகர் பின்னர் கிவெக் கீ செங் என்ற அந்தத் தரகரின் வாடிக்கையாளர் ஒருவருக்கு கேசோய்ல் என்ற ஒருவித வர்த்தக ரீதியிலான எண்ணெய்யை வாங்கி விற்க முன்வந்தார்.

​கேசோய்ல் என்ற அந்த வகையான எண்ணெய்யை வடகொரியாவுக்கு விற்க தடையுள்ளதை அவ்விருவரும் அறிந்திருந்தனர்.

​இதன் தொடர்பில் வெள்ளிக்கிழமை (மார்ச் 21ஆம் தேதி) ஐக்கிய நாடுகள் தடைகளுக்கு எதிராக செயல்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளை லாவ் ஒப்புக்கொண்டார். அவருக்கு 12 மாத, மூன்று வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவருடைய நிறுவனத்துக்கு எதிராக $280,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

குவெக்கிற்கு எதிரான குற்றச்சாட்டில் வழக்குக்கு முந்தைய கலந்துரையாடல் ஏப்ரல் 8ஆம் தேதி இடம்பெற உள்ளது.

குறிப்புச் சொற்கள்