முன்னாள் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், பென்சில்வேனியாவில் ஜூலை 13ஆம் தேதி நடந்த பிரசாரத்தின்போது தமது உரையைத் தொடங்கிச் சிறிது நேரத்தில் துப்பாக்கிச்சூட்டு சத்தம் பலமுறை ஒலித்தது.
அவர் தமது வலது கையால் வலது காதைப் பிடித்துக்கொண்டார். பிறகு, அந்தக் கையை இறக்கி அதைப் பார்த்துவிட்டு மேடைக்குப் பின்னால் மண்டியிட்டார்.
சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட படங்கள் இதோ:
பிரசாரக் கூட்டத்திற்கு வந்திருந்தோர் முன்னிலையில் முன்னாள் அமெரிக்க அதிபரும் அதிபர் தேர்தலுக்கான குடியரசுக் கட்சி வேட்பாளருமான டோனல்ட் டிரம்ப். - படம்: ஏஎஃப்பி
முகத்தில் ரத்தம் இருந்தபடி காணப்பட்ட குடியரசுக் கட்சி வேட்பாளர் டோனல்ட் டிரம்ப்பை உளவுத்துறை அதிகாரிகள் சூழ்ந்துகொண்டனர். - படம்: ஏஎஃப்பி
துப்பாக்கிச்சூட்டை அடுத்து அதிர்ச்சியில் காணப்பட்ட திரு டோனல்ட் டிரம்ப் - படம்: ஏஎஃப்பி
துப்பாக்கிச்சூட்டை அடுத்து டிரம்ப் ஆதரவாளர்கள் சிலர் ரத்தக் கறைகளுடன் காணப்பட்டனர். - படம்: ஏஎஃப்பி
முகத்தில் ரத்தத்துடன் காணப்பட்ட டோனல்ட் டிரம்பைச் சுற்றி உளவுத்துறை அதிகாரிகள் நின்றுகொண்டனர். - படம்: ஏஎஃப்பி
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசுக் கட்சி வேட்பாளர் டோனல்ட் டிரம்ப் மேடையைவிட்டு இறக்கப்பட்டார். - படம்: ஏஎஃப்பி
உளவுத்துறை அதிகாரிகள் சூழ, வலது காதில் ரத்தம் வழியக் காணப்படும் முன்னாள் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப். - படம்: ராய்ட்டர்ஸ்
துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை அடுத்து பிரசாரப் பலகைகளும் தண்ணீர்ப்புட்டிகளும் எங்கும் சிதறிக் கிடந்தன. - படம்: ஏஎஃப்பி

