பொங்கலை முன்னிட்டு வெளியீடு கண்ட ‘தலைவர் தம்பி தலைமையில்’ படம், இந்தி மொழியில் மறுபதிப்பாகிறது.
இதற்கான அறிவிப்பை அப்படத்தின் தயாரிப்பாளர் வெளியிட்டார்.
ஜீவா நடித்திருக்கும் அப்படத்தை இயக்குநர் நிதிஷ் சகாதே இயக்கினார்.
ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள அப்படம் திரைக்குவந்த 10 நாள்களில் உலகளவில் ரூ.31 கோடி வசூல் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, வெற்றியைக் கொண்டாடும் விதமாக அப்படத்தின் படக்குழுவினர் திரையரங்கிற்குச் சென்று ரசிகர்களின் கொண்டாட்டத்தைக் கண்டு ரசித்து வருகின்றனர்.
“தலைவர் தம்பி தலைமையில்’ படம் தமிழில் வெற்றிப் படமாக அமைந்ததைத் தொடர்ந்து அடுத்தகட்டமாக அப்படத்தை இந்தியில் மறுபதிப்பு செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்,” என அப்படத்தின் தயாரிப்பாளர் கண்ணன் ரவி கூறியுள்ளார்.

