ராமேஸ்வரம்: இந்தியா-இலங்கை எல்லையைத் தாண்டி இலங்கையின் கடற்பகுதியில் மீன்பிடித்ததாகக் கூறி 2021, 2022ஆம் ஆண்டுகளில் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்கக் கோரி, அதன் உரிமையாளர்கள் தரப்பில் இலங்கை நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து, இலங்கை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட 12 படகுகளை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, இலங்கையின் மயிலிட்டி துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள 12 படகுகளின் தற்போதைய நிலையைப் பார்வையிட்டு, அவற்றை மீட்டுக் கொண்டு வருவதற்காக ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீனவர்கள் குழுவினர் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 25) விசைப்படகில் புறப்பட்டுச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல பறிமுதல் செய்யப்பட்ட மற்ற படகுகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அவை மீட்கப்பட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் குரல் எழுப்பியுள்ளனர்.