புதுடெல்லி: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக நிறைய கருத்துக்கணிப்புகள் வெளிவந்த நிலையில், ‘ஆக்சிஸ் மை இந்தியா’ அமைப்பு வெளியிட்ட முடிவுகள் தவெகவுக்கு ஆதரவாக அமைந்திருந்தன.
இதனால் பல்வேறு தரப்பினர் தங்களை ஏளனம் செய்ததாகவும் இறுதியில் தங்கள் கணிப்பு துல்லியமாக அமைந்ததாகவும் அந்த அமைப்பின் தலைவர் பிரதீப் குப்தா ஓர் ஊடகப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
“தவெக தலைவர் விஜய் வெற்றியை நோக்கி நகர்வார் என்று துணிச்சலாக நாங்கள் வெளியிட்ட கணிப்பைக் கண்டு அரசியல் விமர்சகர்களும் மற்றவர்களும் எங்களைக் கேலி செய்தனர்.
“எங்களை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. ஆனால், நாங்கள் பின்வாங்கவில்லை,” என்று பிரதீப் குப்தா கூறியுள்ளார்.
தரவுகளின் அடிப்படையில் மக்கள் மனநிலையைத் தாங்கள் துல்லியமாக ஆய்வு செய்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், தங்களது கணிப்பின்படியே மக்கள் வாக்களித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

