புக்கிட் பாஞ்சாங்கில் தீ; ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்

புக்கிட் பாஞ்சாங்கில் ஜனவரி 14ஆம் தேதி ஏற்பட்ட தீச்சம்பவத்திற்குப் பிறகு, ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

ஜெலபாங் ரோடு, புளோக் 501இல் ஏற்பட்ட அந்த தீச்சம்பவம் குறித்து அதிகாலை 3.55 மணிவாக்கில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஐந்தாம் மாடியில் இருந்த வீடு ஒன்றின் படுக்கை அறையில் தீ மூண்டது. தீயை அணைக்க, தனது அதிகாரிகள் வலுக்கட்டாயமாக வீட்டிற்குள் நுழையவேண்டியிருந்ததாக குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

அவர்கள் பின்னர் நீரைப் பீய்ச்சி தீயை அணைத்தனர். குடிமைத் தற்காப்புப் படை சம்பவ இடத்தைச் சென்றடைவதற்கு முன்னர் கிட்டத்தட்ட 100 குடியிருப்பாளர்கள் சொந்தமாகவே புளோக்கில் இருந்து வெளியேறிவிட்டனர்.

குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் லேசான காயங்களுக்கு மேலும் நால்வரைச் சோதித்தனர். அவர்கள் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்தனர்.

தீச்சம்பவம் ஏற்பட்டதற்கான காரணத்தைக் கண்டறிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!