பூன் லே பகுதியில் திடீர் வெள்ள எச்சரிக்கை, அங்குச் செல்வதைத் தவிர்க்கவும்: பியுபி

பூன் லே பகுதியில் திடீர் வெள்ள எச்சரிக்கை, அங்குச் செல்வதைத் தவிர்க்கவும்: பியுபி

1 mins read
சுமத்ராவில் வீசும் பலத்த காற்று சிங்கப்பூரைப் பாதிக்கக்கூடும்: வானிலை ஆய்வகம்
bfdc6088-ad3d-40fa-ae8d-09cf298e6a23
மே மாதத்தில் எஞ்சியுள்ள நாள்களில், சிங்கப்பூரின் பல பகுதிகளில் மதிய வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வகம் முன்னுரைத்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பொதுப் பயனீட்டுக் கழகம் (பியுபி) சனிக்கிழமை (மே 16) காலை பெய்த கனமழையால் ஜூரோங் வெஸ்ட் வட்டாரத்தில் உள்ள ஓர் இடத்தைத் தவிர்க்கும்படி வாகனவோட்டிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.

ஜாலான் பூன்லேயில் (இன்டர்நேஷனல் ரோடு முதல் என்டர்பிரைஸ் ரோடு வரை) திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதால், அடுத்த சில மணி நேரத்துக்கு அப்பகுதிக்குச் செல்லவேண்டாம் என்று அது காலை 9.50 மணிக்குக் கூறியது.

இம்மாதத்தில் எஞ்சியுள்ள நாள்களில், மதிய வேளைகளில் சிங்கப்பூரின் பல பகுதிகளில் குறுகிய நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வகம் முன்னுரைத்துள்ளது.

இந்தோனீசியாவின் சுமத்ரா தீவில் வீசும் பலத்த காற்று, சிங்கப்பூரில் சில நாள்களில், அதிகாலை வேளையிலும் காலைப் பொழுதிலும் இடியுடன் கூடிய மழையையும் பலத்த காற்றையும் கொண்டுவரக்கூடும்.

குறிப்புச் சொற்கள்