நிதிச் சேவைகள், திறனாளிகள், விமானப் போக்குவரத்து துறை ஆகியவை உட்பட முக்கிய அம்சங்கள் தொடர்பில் சீனாவின் குவாங்டோங்குடன் சிங்கப்பூர் அணுக்கமாகச் செயல்பட விரும்புவதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் ஓங் யி காங் நேற்று தெரிவித்தார்.
இருதரப்பும் நேற்று இணையத்தில் சந்தித்துக்கொண்டதில் அவற்றின் பொருளியல் உறவு வலுவடைய உறுதி தெரிவித்துக்கொண்டன.
வருடாந்திர நிகழ்வான நேற்று நடைபெற்ற இச்சந்திப்பில் சிங்கப்பூர் நிறுவனங்களும் அவற்றின் பங்காளி நிறுவனங்களும் மொத்தம் 15 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.

