தீபாவளியை முன்னிட்டு சட்டவிரோதமாக வாண வெடிகளை வெடித்தால் கடும் நடவடிக்கை: சிங்கப்பூர் போலிஸ் எச்சரிக்கை

தீபாவளி நெருங்கி வரும் வேளையில், சிங்கப்பூரில் சட்டவிரோதமாக பட்டாசு மற்றும் வாணவெடிகள் வெடிக்க வேண்டாம் என போலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.

இத்தகைய சட்டவிரோத வாணவெடிகள் பொதுமக்களுக்கும் அவர்களது சொத்துகளுக்கும் சேதம் விளைவிக்கும் அபாயம் இருப்பதாகக் குறிப்பிட்ட போலிசார், சட்டவிரோதமாக வாணவெடிகள், பட்டாசுகள் வைத்திருப்பது, அவற்றை வெடிப்பது போன்ற குற்றங்களுக்கு ஈராண்டுகள் வரை சிறைத் தண்டனை, $50,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் என்றனர்.

தீபாவளியை முன்னிட்டு போலிசார் இன்று வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவல்கள் இடம்பெற்றன.

சட்டவிரோதமாக வெடிபொருள்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட வாணவெடிகளை வெடிக்க வேண்டாம் எனவும் அவற்றால் தீப்பற்றும் அபாயம் இருப்பதாகவும் பொதுமக்களுக்கு அது அச்சுறுத்தலாக அமையும் எனவும் போலிசார் வலியுறுத்தியுள்ளனர்.

அத்தகைய வாணவெடிகள் வெடித்தாலோ, அதனால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல், சேதம் ஏற்பட்டாலோ ஓராண்டு முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம், பிரம்படி போன்றவை விதிக்கப்படலாம்.

தீபாவளியை முன்னிட்டு லிட்டில் இந்தியாவில் கூட்ட நெரிசல் அதிகரித்துள்ள வேளையில், சிராங்கூன் ரோடு வழியாக வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த துணை போலிஸ் அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

சட்ட விரோதமாக வாகனங்களை நிறுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!