புதிய தைவானிய அதிபரைப் பாராட்டிய சிங்கப்பூர்

தைவானின் அடுத்த அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள லாய் சிங்-தேவுக்கு சிங்கப்பூர் தனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொண்டுள்ளது.

இவ்வாண்டின் தைவான் பொதுத் தேர்தலில் திரு லாயின் ஆளும் ஜனநாயக முன்னேற்றக் கட்சி சனிக்கிழமையன்று (ஜனவரி 13) வெற்றிபெற்றது. அதனைத் தொடர்ந்து திரு லாய் அதிபராகப் பதவியேற்பது உறுதியானது.

“தைவானுடனும் தைவானிய மக்களுடனும் சிங்கப்பூர் நீண்டகாலம் நீடிக்கும் நெருக்கமான உறவைக் கொண்டுள்ளது. எங்களின் ‘ஒரு சீனா’ கொள்கைக்கு ஏற்ப இந்த உறவைத் தொடர்ந்து வளர்த்துக்கொள்வோம்,” என்று ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 14) வெளியிடப்பட்ட அறிக்கையில் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு சொன்னது.

சீனாவுக்கும் தைவானுக்கும் இடையிலான உறவை அமைதியான முறையில் வளர்ப்பதற்கு சிங்கப்பூர் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வந்துள்ளதாகவும் வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டது.

“பேச்சுவார்த்தை, நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளுதல், ஒத்துழைக்க முயற்சி செய்தல் ஆகியவை (தைவான்) நீரிணையில் இரு தரப்புக்கும் பலனளிக்கும்.

“அதுவே அந்த ஒட்டுமொத்த வட்டாரம் நிலைத்தன்மையுடன் இருக்கவும் செழிக்கவும் வழிவகுக்கும். அதை சிங்கப்பூரும் அனைத்துலக சமூகமும் வரவேற்கும்,” என்று வெளியுறவு அமைச்சு கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!