சிங்கப்பூர்-புருணை அணுக்க உறவை மறுஉறுதிப்படுத்திய பிரதமர் லீ

பிரதமர் லீ சியன் லூங், ஜனவரி 15ஆம் தேதி, புருணை சுல்தான் ஹசனல் போல்கியாவைச் சந்தித்தார்.

பண்டார் ஸ்ரீ பகவானில் உள்ள இஸ்தானா நூருல் இமான் அரண்மனையில் சுல்தானைச் சந்தித்தபோது, இருநாட்டு உறவு, அணுக்கமான பங்காளித்துவம் ஆகியவை தொடர்பில் சிங்கப்பூரின் கடப்பாட்டைப் பிரதமர் லீ மறுஉறுதிப்படுத்தினார்.

இரு நாடுகளுக்கு இடையே அரசதந்திர உறவு தொடங்கி இவ்வாண்டுடன் 40 ஆண்டுகள் நிறைவுபெறுவதைப் பிரதமர் லீ தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.

“இரு நாட்டு மக்களுக்கு இடையிலான உறவு ஆழமானது. அமரர்களான திரு லீ குவான் இயூ, சுல்தான் ஓமர் அலி சைஃபுதீன் இருவரின் காலத்திலிருந்தே இத்தகைய உறவு நிலவுகிறது,” என்று திரு லீ கூறினார்.

அடுத்த தலைமுறைத் தலைவர்கள் இந்த நட்பை மேம்படுத்தி இரு நாடுகளையும் முன்னேற்றப் பாதையில் வழிநடத்துவர் என்று தாம் உறுதியாக நம்புவதாகவும் அவர் சொன்னார்.

புருணை இளவரசர் அப்துல் மட்டீன் - யாங் மூலியா அனிஷா ரோஸ்னா இருவரின் மணவிழாவில் பங்கேற்கப் பிரதமர் லீ புருணை சென்றுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!