முத்தமிழ் விழா சிறுகதைப் போட்டிகள்

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் முத்தமிழ் விழாவை ஒட்டி இரு பிரிவுகளாக சிறுகதைப் போட்டி நடத்தப்படுகிறது. 

பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இளையர்களுக்கும் ஒரு பிரிவாகவும் பொது மக்களுக்கு ஒரு பிரிவாகவும் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் கூடுதல் சிறப்பாக ஒரு சிறந்த அறிவியல் கதைக்கும் ஒரு சிறந்த வரலாற்றுக் கதைக்கும் தனியாகப் பரிசுகள் வழங்கப்படும்.

பொது மக்கள் பிரிவில்  முதல் பரிசு $500; இரண்டாம் பரிசு $300; மூன்றாம் பரிசு $200. மூன்று ஊக்கப் பரிசுகள் ஒவ்வொன்றுக்கும் $100 வழங்கப்படும்.

18 முதல் 25 வயது வரையுள்ள மாணவர், இளையர் பிரிவில் முதல் பரிசு $300; இரண்டாம் பரிசு $250; மூன்றாம் பரிசு $200. 3 ஊக்கப் பரிசுகள் ஒவ்வொன்றுக்கும் $125 வழங்கப்படும்.

அமரர் சே.வெ. சண்முகம் – அவரது மனைவி திருவாட்டி ருக்மணி அம்மாள் நினைவாக நடத்தப்படும் இப்போட்டிக்கான பரிசுகளை அவர்களின் குடும்பத்தினர் வழங்குகிறார்கள்.

சிறப்பு அறிவியல் சிறுகதைக்கு டாக்டர் காமேஸ்வரன் & டாக்டர் லலிதா காமேஸ்வரன் நினைவுப் பரிசு $250.00, சிறப்பு வரலாற்றுச் சிறுகதைக்கு டாக்டர் சங்கரன் & முனைவர் சித்ரா சங்கரன் வழங்கும் பரிசு $250.00 ஆகியவை வழங்கப்படும்.

அனைத்துப் போட்டிகளுக்கும் படைப்புகள் வந்து சேர வேண்டிய இறுதி நாள்: 20.03.2024.

சிங்கப்பூர்க் குடியுரிமை பெற்றவர்கள், நிரந்தரவாசிகள் இப்போட்டிகளில் பங்கேற்கலாம். மேல் விவரங்களுக்கு முத்துமாணிக்கத்தை (9675 3215) அல்லது அன்புச்செல்வனை (9850 7271) தொடர்புகொள்ளலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!