இரு கார்களுடன் விபத்துக்குள்ளான மோட்டார்சைக்கிள் தீப்பிடித்தது; இருவர் மருத்துவமனையில்

இருவர் பயணம் செய்த மோட்டார்சைக்கிள், இரண்டு கார்களுடன் விபத்துக்குள்ளானதில் அந்த மோட்டார்சைக்கிள் சாலை நடுவே தீப்பற்றி எரிந்தது.

பிப்ரவரி 21ஆம் தேதியன்று காலை 9 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில் 20 வயது ஆண் மோட்டார்சைக்கிளோட்டி, 22 வயதுடைய பெண் பயணி ஆகிய இருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆயர் ராஜா விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் ஈஸ்ட் கோஸ்ட் விரைவுச்சாலைப் பகுதியில் தீச்சம்பவம் ஏற்பட்டிருப்பதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது.

அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் செல்வதற்குமுன் நிலப் போக்குவரத்து ஆணையத்தின் சாலைப் போக்குவரத்து அதிகாரிகள் நெருப்பை அணைத்துவிட்டார்கள்.

தீ மூண்டதற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடந்துவருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!